மதுரை எல்லீஸ்நகர் 60-வது வார்டு பகுதியில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகளால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. எனவே வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.