கடலூர் மாவட்டம் கிள்ளை வடக்கு மெயின்ரோடு இணைப்புச் சாலை-ஆதிதிராவிடர் மேற்குச் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.