ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையான மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் சாலையில் ஒளிரும் தகடுகளை அமைக்க வேண்டும். அதோடு அந்த பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைத்தால் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?