அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, வரதராஜன்பேட்டை புதுத்தெருவை இணைக்கும் கவரப்பாளையம் - தென்னூர் இடையே மூன்று வழி சாலை வளைவில் தினமும் காலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த மூன்று வழி சாலையில் வேகத்தடை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.