ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-13 17:28 GMT

அரியலூர் மார்க்கெட் தெருவில் பேருந்து நிலையம், நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கோட்டாட்சி தலைவர் அலுவகம், அரசு மேல்நிலைப்பள்ளி, கால்நடைத்துறை, மாவட்ட நூலகம் மற்றும் பல அலுவலகங்கள் உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை கழிவுநீர் வாய்க்கால் மீது தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது பலகை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்பொழுது சாலையில் பாதி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அரசு அலுவலகங்களுக்கு வாகனத்தில் வருபவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் மார்க்கெட் தெருவின் சாலை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு எந்த வித வாகனமும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி