விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டுள்ள நிலையில் நகர் முழுவதும் காற்று மாசாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அல்லல்படுவதோடு சுவாச பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.