விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா எஸ்.ராமச்சந்திரபுரத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.