விருதுநகர் ஆனைகுழாய் தெருவிளக்கு அருகே செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு பலநாட்கள் ஆகியும் இன்னும் சரிசெய்யப்படாத நிலை உள்ளது. இதனால் இங்கு எச்சரிக்கைக்காக வைக்கப்பட்ட தடுப்பு அகற்றப்படாததால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் இந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூடி இந்த தடுப்பை அகற்ற வேண்டும்.