விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனி பாலவிநாயகர் கோவில் தெருவில் புதிய சாலைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலை பணியை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.