வேலூர் மாநகராட்சி வார்டு எண்:4-ல் செங்குட்டை மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்தத் தெருவில் சிறுவர்களுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தெருவில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கும்பலாகச் சேர்ந்து தெருவில் செல்பவர்களை அச்சுறுத்தி வருகின்றன. நகராட்சி நிர்வாகம் தெருவில் உள்ள நாய்களை கட்டுப்படுத்துமா?
-பி.துரை, கல்புதூர்.