மங்களூர் ஊராட்சி காலனி மூப்பனார் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.