பழுதான அரசு ஜீப்

Update: 2022-09-20 11:37 GMT



வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு அதிகாரிகளும் தான் வந்த வாகனங்களில் சென்றனர். அப்போது அதிகாரி ஒருவரின் ஜீப் பழுது காரணமாக இயங்கவில்லை. இதனால் அந்த ஜீப்பில் வந்தவர்கள் அந்த ஜீப்பை தள்ளி சென்று இயக்கினர். அரசு வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்