ஆபத்தான தேன்கூடு

Update: 2026-08-02 13:03 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் ஓராண்டுக்கு மேலாக பெரிய தேன்கூடு ஒன்று ஆபத்தான முறையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்களையும், அப்பகுதி பொதுமக்களையும் எந்த நேரத்திலும் தேனீக்கள் கடிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் இந்த தேன்கூட்டை உடனடியாக அப்புறப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்