அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் முழுவதும் குளங்களில் மண்வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குளங்களை இரண்டு ஆள் உயரத்திற்கு ஆழப்படுத்துவதால், மழைக்காலங்களில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அதில் இறங்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், வெட்டப்படும் மண் வெளி ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. எனவே, மண்வெட்ட அனுமதி வழங்கும் போது உரிய நிபந்தனைகளை விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.