கம்பம் அருகே புதுப்பட்டி பேரூராட்சி உதயம்நகரில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் இதுவரை தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.