டாஸ்மாக் கடையை அகற்றுவது அவசியம்

Update: 2026-05-24 16:12 GMT
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் நகர் விரிவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இப்பகுதியில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு மதுகுடிக்கும் நபர்கள் போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்லும் பெண்களிடம் வீண்தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்