நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் கிராமத்தில் உலர்களம் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் முந்திரிக்கொட்டை, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை சாலையிலேயே காய வைக்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள் அவற்றில் வழுக்கி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உலர்களம் அமைத்துத்தர நடவடிக்கை எடுப்பார்களா?