மதுரை நகர் பெத்தானியாபுரத்தில் அகஸ்தியர் தெரு, திருவள்ளுவர் தெரு, என்.எஸ்.கே. தெரு, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சில இடங்களில் மூடப்படாமலே உள்ளது. மேலும் அப்பகுதியில் சில இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் இணைப்புகளை சரி செய்யவும், சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.