குரங்குகள் அட்டகாசம்

Update: 2026-05-24 14:59 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா அயன்நத்தம்பட்டி ஆர்.சி. தெரு பகுதியில் சில மாதங்களாகவே குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் அப்பகுதி குடியிருப்புக்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும் குழந்தைகளை அச்சுறுத்துவது உள்ளிட்ட அட்டகாசங்களை செய்து வருகிறது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை மேற்கண்ட பகுதியில் இருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்