நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்தநிலையில், இரவு நேரங்களில் டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வருபவர்கள் சிலர் அருகே உள்ள வாரச்சந்தை வளாக கடைகள் முன்பு மதுகுடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மார்க்கெட் பகுதியில் மதுகுடிப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரவு நேரங்களில் மார்க்கெட் பகுதியில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.