பயன்படாத குடிநீர் எந்திரங்கள்

Update: 2026-05-24 14:00 GMT

கோடை சீசன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் தாகம் தணிக்க ஆங்காங்கே குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் சில இடங்களில் எந்திரங்கள் பழுதாகி பயன்படாமல் கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே அந்த குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை பழுது நீக்கி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்