அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் நிலையத்திற்குள் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலரும் அச்சத்துடன் நிற்கின்றனர். இவை கூட்டமாக நின்று கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை கடிக்க பாய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.