விபத்து அபாயம்

Update: 2026-05-24 12:42 GMT

நாகர்கோவில் மணிமேடை பகுதியில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் சாலை எப்போது வாகன போக்குவரத்துடன் காணப்படும். இந்த சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடையின் மீது நடைபாதையும், ஓடையை சுத்தம் செய்வதற்காக போடப்பட்டுள்ள துவாரங்களில் இரும்பு மூடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தில் அந்த இரும்பு மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் ஒருவித அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர். மேலும், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த இரும்பு மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, காரியக்காரவிளை, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்