அரசமரத்தை அகற்ற கோரிக்கை

Update: 2026-05-24 10:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடை முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பயணிகள் நிழற்குடையில் அரசமரம் ஒன்று வளர்ந்து கட்டிடத்தை மேலும் சேதப்படுத்துவதுடன், சுவர்களில் பெரியளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள மின்கம்பிகளிலும் படர்ந்துள்ளது. எனவே அந்த அரசமரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்