மேற்கூரை அமைக்க வேண்டும்

Update: 2026-05-24 10:45 GMT

அரியலூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது. பயணிகளின் வாகனங்கள் நாள் முழுவதும் வெயிலில் நிற்கிறது. இதனால் வாகனங்கள் பழைய வாகனம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் தங்களது வாகனங்களை விட்டுச்செல்லும் வாகன ஓட்டிகள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்கூரை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்