விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி சாலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் எந்நேரத்திலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் நீர்த்தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.