கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அங்கு தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. அவை நடைபாதையில் படுத்து ஓய்வெடுக்கின்றன. அப்போது அந்த வழியாக நடைபயிற்சி செல்லும் பொதுமக்களை துரத்திச்சென்று கடித்து வருகின்றன. எனவே அங்கு தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.