மொரப்பூர்-கல்லாவி மெயின் ரோட்டில் அரசு டாஸ்மார்க் கடை இயங்குகிறது. இக்கடையை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் இப்பகுதி பஸ் நிறுத்தத்தில் ஏறி, இறங்கி செல்கின்றனர். மேலும் மது பிரியர்கள் சாலையில் அமர்ந்து மது அருந்தி விட்டு தள்ளாடி செல்வதாலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.