கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பர்கூர் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் உடற்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தற்போது அதிக அளவில் புதர்கள் வளர்ந்துள்ளன. இதில் விஷ பூச்சிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி தொடங்கும் முன்பு மைதானத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?