பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் கிராம ஊராட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான தனி நபர் அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது. செங்குணம், அருமடல் என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் வழங்கப்பட்டன. இதனிடையே கடந்த பல மாதங்களாக செங்குணம் பகுதிக்கு மட்டும் பணி வழங்கப்படாததால், பொதுமக்கள் வேலையில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.