கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பொற்றையடி மற்றும் வழுக்கம்பாறை ஆகிய இடங்களில் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த நிறுத்தங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் முதியோர்கள், பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி அந்த பகுதிகளில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.