விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் படந்தால் பிரிவில் உள்ள பழைய பயணிகள் நிழற்குடை இடியும் நிலையில் சேதமடைந்து அகற்றப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் அதன் அருகே அச்சத்துடனேயே நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி சேதமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக அமைத்துத்தர நடவடிக்கை எடுப்பார்களா?