கரூர் மாவட்டம் நொய்யல், புன்னம் சத்திரம், காகிதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பல்வேறு நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் என சாலை ஓரத்தில் பல்வேறு வகையான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரப் பதாகைகளை குறிப்பிட்ட நாட்களில் யாரும் அகற்றுவதில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி பதாகைகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. மேலும் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது பதாகை திடீரென சாய்ந்தாலும் விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.