அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் காலனி தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் சிதிலமடைந்ததால் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு அந்த கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில், இன்னும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் தற்போது தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. எனவே இடிக்கப்பட்ட இடத்தில் புது அங்கன்வாடி மையம் கட்டித்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.