கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட மிஷன் காம்பவுண்ட் பகுதியில் குடியிருப்புகளுக்கு செல்ல கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடைபாதையை தொடர்ச்சியாக அமைக்காமல் இடைவெளி விட்டு அமைப்பதால் பொதுமக்கள் இரவில் நடந்து செல்ல சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே நடைபாதையை இடைவெளி இன்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.