ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தங்களது மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். மேலும் இதில் வினோத சத்தம் எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களால் சாலையில் பயணிக்கும் பிற வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?