அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமம். இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே சின்னேரி உள்ளது. இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாராமல் உள்ளதாலும், தனியார் குவாரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியினுள் செல்வதாலும் ஏரி முழுவதும் பாசி மற்றும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் இந்த ஏரியில் பொதுமக்கள் குளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு போய்விட்டு தாகம் தணிக்க தண்ணீர் குடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே சின்னேரியை தூர்வாரி ஆழப்படுத்த சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.