பயணிகள் அவதி

Update: 2026-03-08 10:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் மீமிசல் கிராமத்தில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் போதிய கழிவறை வசதி இல்லாமல் உள்ளதால், இங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பஸ் நிலையத்தில் போதிய கழிவறை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்