பயணிகள் அவதி

Update: 2026-03-01 11:07 GMT

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் மண்மாரியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் பள்ளப்பட்டி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் இங்குள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால், மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்துநிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்