கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை அருகே உள்ள ஆலவயல் பகுதியில் தெருவிளக்குகள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவில் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அந்த ெதருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.