கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் கழிவறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்பட எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள், பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.