அரியலூர் மாவட்டம் கடுகூர் கிரமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலை வழியாக தினமும் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடுகூர் கிராமத்தில் அதிகரித்து வரும் தெருநாய்கள் எண்ணிக்கையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் தெருநாய்கள் கடிக்க பாய்கின்றன. இதனால் அவர்கள் அச்சத்துடன் சென்று வரும் சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.