சிறுத்தை அட்டகாசம்

Update: 2026-02-08 18:32 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கண்ணம்பள்ளியில் சிறுத்தை அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் ஊருக்குள் வரும் சிறுத்தை கால்நடைகளை தாக்குகிறது. மேலும் பொதுமக்களையும் தாக்க துரத்துகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு தனியாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்