கிருஷ்ணகிரியில் முக்கிய வீதிகள், சாலைகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.