கள்ளக்குறிச்சியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற வேண்டிய விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் பல மாதங்களாக நடைபெறாமல் உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் நேரடியாக எடுத்துக்கறி தீர்த்துக்கொள்ள முடியாமல் உள்ளனர். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.