சேலம் அரிசிபாளையம் பால் தெருவில் சாலையோரம் காவல் துறை சார்பில் குற்றச்செயல்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கண்காணிப்பு கேமராவின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே கண்காணிப்பு கேமராவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.