காலி மதுபாட்டில்களை சாலையில் உடைக்கும் மதுப்பிரியர்கள்

Update: 2026-02-08 11:36 GMT

அரியலூர் நகரில் இருந்து கல்லங்குறிச்சி செல்லும் சாலையில் ஏராளமான வீடுகளும், கடைகளும் உள்ளன. இந்த வழியாக ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இந்த பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் மது அருந்திவிட்டு வரும் மதுப்பிரியர்கள் பலரும் சாலையில் காலி பாட்டில்களை உடைத்துச்செல்கின்றனர். இதனால் நடந்து செல்வோரின் கால்களை இந்த கண்ணாடி துகள்கள் பதம் பார்க்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களின் சக்கரங்கள் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்