இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2026-02-08 11:36 GMT

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் அப்பகுதியில் நடந்து செல்வதற்கே அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகனங்கள் செல்லும் போது அதன் குறுக்கும், நெடுக்குமாக செல்லும் நாய்களால் பலரும் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்