திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், நாமக்கல், பெரம்பலூர் வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பழைய பால்பண்ணை பஸ் நிலையத்திற்குள் வராமல், மேம்பாலத்துக்கு மேலேயே செல்கின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அனைத்தும் பழைய பால்பண்ணை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.