விக்கிரவாண்டி அருகே செம்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு, நாள் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.